tamilnadu

யூரோப்பியன் பாண்ட் என்கிற பெயரில் மோசடி

கோவை, ஜூலை 14- கோவையில் யூரோப்பியன் பாண்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபரை பாதிக்கப்பட்ட தரப்பினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே.புதூர் தோட்ட வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவர் உறவினர்கள் சிலருடன் இணைந்து யூரோப்பியன் பாண்ட்  என்ற பெயரில் ஐரோப்பிய நாட்டில் உள்ள தனியார்  நிறுவனங்களில் பணம் முதலீடு செய்வதாக, கடந்த சில வருடங்களாக பல்வேறு நபர்களிடம் பணம் வசூல் செய்து வந்துள்ளனர். இவ்வாறு ஐம்பதுக்கும் மேற் பட்டவர்களிடம் தலா ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை  வசூல் செய்து, அவர்களுக்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமும் டெல்லி, பாம்பே  போன்ற சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்றும் ஆடம்பர வாழ்க்கையைக் காட்டி ஆசையைத் தூண்டி யுள்ளனர்.  இந்நிலையில், இந்த ஆடம்பர செலவுகளில் மயங்கிய பொதுமக்கள், செந்தில்குமாரிடம் லட்சக்கணக்கான ரூபாயை கொடுத்துள்ளனர். ஆனால், பணத்தைக் கொடுத்து மாதக் கணக்காகியும், பல்வேறு காரணங்களை சொல்லி கொடுத்த பணத்தைத் தராமல் ஏமாற்றி வந்த தால், பாதிக்கப்பட்டவர்கள் செந்தில் குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்நிலையில், சனியன்று பாதிக்கப்பட்ட ஒரு தரப்பி னர் வீட்டிலிருந்த செந்தில்குமாரை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாந கர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.