தம்பதியினர் கைது- சிறையில் அடைப்பு
சேலம், அக்.19- சேலத்தில், தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி யில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிரீன் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் இயங்கிவரும் ஆர்எம்வி குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் மணிவண்ணன். இவர் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக தருவதாக கூறி உள்ளார். மேலும் ஊறுகாய், மசாலா வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வகைகள் ஆகியவற்றை தயாரித்து விநியோக உரிமை தருவதாக கூறி உள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கான விநியோக உரிமை தருவ தாகவும், அவ்வாறு செலுத்தும் பணத்துக்கு லாபம் மற்றும் 10 சதவிகிதம் ஊக்கத்தொகையும் தருவதாகவும் கூறி உள்ளார். இதன்பேரில் பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை பெற்று உள்ளார். இதை நம்பி முதலீடு செய்து ஏமாந்த சேலம் அங்கம் மாள் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு மணிகண்டன், அவரது மனைவி இந்துமதி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டனின் மோசடிக் செயல்களுக்கு அவரின் சகோதரர்கள் ராம் மற்றும் லட்சுமணன், மாமனார், மாமியார் சரஸ்வதி அவரது அலுவலக ஊழியர்கள் ஆகி யோர் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் மணிவண்ணன் மற்றும் அவரின் மனைவி டமிருந்து 2 மடிக்கணினி, 13 செல்போன்கள், 2 சொகுசு கார்கள், 10 பவுன் தங்கச் செயின், 2 தங்க வளையல்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் போலி ஆவணங்கள் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும் போலி நிறுவனங்கள் மற்றும் மோசடி பேர் வழிகளிடம் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அவர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.