tamilnadu

img

ரசாயன கலவையில் பழுக்க வைத்த வாழைப்பழங்கள் குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சீல்

திருப்பூர், டிச. 18 - பல்லடம் அருகே மாணிக்கா புரம் பகுதியில் ரசாயன கலவை யை பயன்படுத்தி வாழைக் காயைப் பழுக்க வைத்து  பழங்க ளாக மாற்றி விற்பனைக்கு அனுப் பியதை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஆய்வு செய்து கண்டுபிடித்து குடோனுக்கு சீல் வைத்தனர்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாணிக்காபுரம் அருகே வேல்மு ருகன் என்ற வியாபாரிக்குச் சொந் தமான குடோன் உள்ளது.இந்நி லையில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமை யிலான அதிகாரிகள் கடந்த  இரு தினங்களுக்கு முன்பு இரவு இந்த குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வருவதை அறிந்து அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்ட னர்.  அதற்குமுன் அவர்கள் வாழைக் காய்களை விரைந்து பழுக்க வைப்பதற்காக ரசாயனம் கலந்த நீரில் அவற்றை ஊற வைக் கும் வேலையில் ஈடுபட்டிருந் தனர். ஒரு புறம் பச்சை வாழைத் தார்கள் குவியல் குவியலாக கிடக்க, மறுபுறம் ரசாயன ஊறலில் நிறம் மாறிய வாழைக் காய்கள் பழுத்த பழங்களைப் போல காட் சியளித்தன. இதையடுத்து குடோ னுக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள  மற்ற பழ குடோன்கள் மீதான கண்கா ணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். திடீர் சோதனை குறித்து டாக்டர் விஜயலலிதாம்பிகை கூறு கையில்,‘’அறுவடைக்குப்பின் வாழைக் காய்களை, காற்றுப் புகாத அறையில் வைத்தால் அதிக பட்சம் 10 மணி நேரத்தில் பழுத்து விடும். ஆனால், இவர்கள், ‘எலிக் ஸிர்’ என்ற ரசாயனத்தை நீரில் கலந்து அதில் வாழைக்காய்களை ஊற வைத்து விரைந்து பழுக்கச் செய்கின்றனர். பழுத்த பழம் போல நிறத்தை மாற்றி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இவ்வா றான ரசாயன கலப்பு பழங்களைச் சாப்பிட்டால் புற்று நோய் பாதிக் கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பழங்களை வாங்கும் போது பொது மக்கள் கணிப்பாக இருக்க வேண் டும் என்று கூறினார்.