tamilnadu

img

எச்.ராஜா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்திடுக காவல் ஆணையரிடம் தபெதிகவினர் மனு

கோவை, ஜூலை 20- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை மாநகரக் காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதியன்று பெரியார் சிலை மீது காவி வண்ணம் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 18ஆம் தேதி கோவை யில் அடுத்தடுத்து 4 கோயில்களுக்கு மர்ம நபர்  தீ வைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கஜேந்திரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

இந்நிலையில், கோவையில் இந்து கோவில்களை  தபெதிகவினர் சேதப்படுத்தி யதாக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட் டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது திட்டமிட்டு தபெதிக  மீதும், அதன்  பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மீதும் அவதூறு கிளப்பும் செயலாகும்.

ஆகவே, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, சட்டப்பபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் தபெதிகவினர் மனு அளித்த னர்.