tamilnadu

img

பெண் மாவோயிஸ்ட் கைது

கோவை, மார்ச் 11– தமிழக - கேரள எல்லையான ஆனை கட்டி பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் கர்நாடகாவைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் அதிக ரித்து வருவதாக கருதபடுகிறது. இதனை யடுத்து கியூ பிரிவு மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தொடர் கண்கா ணிப்பு பணி மற்றும் தேடுதல் வேட்டைக ளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், எல்லைப்பகுதிகளில் இருந்து நகர்புறங் களில் மாவோயிஸ்ட்டுகள் நடமாடுவதாக வெளியான ரகசிய தகவலின் பேரில் காவல் துறையினர் தணிக்கைச்சாவடிகளில் சோத னையில் ஈடுபட்டனர். இந்நிலையில், புத னன்று காலை கேரளாவில் இருந்து ஆனை கட்டி வழியாக கோவை வரும் அரசு பேருந்தை ஆனைக்கட்டி வனத்துறை தணிக்கைச்சாவடியில் கியூ பிரிவு காவல்  துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பேருந்துக்குள் இருந்த மாவோ யிஸ்ட் ஸ்ரீமதியை  காவல் துறையின மடக்கி பிடித்தனர். இவரை கைது செய்து மறைமுக இடத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட இவர் மீது கர்நாடக மாநிலத்தில் பல்வேறு வழக்கு கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் எந்த குழுவைச் சேர்ந்தவர், இவர் மீது எந்தெந்த மாநிலத்தில் வழக்குகள் உள்ளது. அதேபோல, யாரைசந்திப்பதற்காக சென்று கொண்டிருக்கிறார் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.