கோவை, அக். 2- மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண் டித்து பிஎஸ்என்எல் அமைப்பு தினத்தை கருப்பு தினமாக கடை பிடிப்பது என்கிற அடிப்படையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண் ணாவிரத போராட்டம் மேற் கொண்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு 4 ஜி அலைக்கற்றை வழங்காமல், நிறுவனத்தின் வளர்ச்சியை திட்டமிட்டு சீர்கு லைக்கிறது. மேலும், ஊழியர்க ளுக்கு நெருக்கடி கொடுத்து பணி யிலிருந்து விடுவிக்க முயற்சி செய் கிறது.
இதனைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிர்வாகத்தை எதிர்த்தும் அமைப்பு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பது என அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கூட்டமைப்பு அறி வித்துள்ளது. இதனடிப்படையில், கோவை மெயின் தொலைபேசி நிலை யத்தில் நடைபெற்ற கருப்பு தின ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணா விரத போராட்டத்திற்கு கூட்ட மைப்பின் தலைவர் ராபர்ட் தலைமை தாங்கினார். செயலா ளர் சி.ராஜேந்திரன் சிறப்புரை யாற்றினார். இதில் கூட்ட மைப்பின் நிர்வாகிகள் சியாம் சுந்தர், தங்கதுரை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். ஏஐபிஎஸ் என்எல்இஏ சங்கத்தின் மாவட்ட செயலாளர் காவெட்டி ரங்கன் நிறைவுரையாற்றினார். முடி வில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாவட்ட பொருளாளர் எஸ். மகேஸ்வரன் நன்றி கூறினார். இப்போராட்டத்தில் பிஎஸ் என்எல் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
இதேபோல், கோவை மாவட் டம், பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊழி யர் சங்கத்தின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்க மணி, எஸ்என்இஏ செயலாளர் பி.பி.பாலாஜி, என்எப்டிஇ செய லாளர் எம்.பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலத்தில் நடைபெற்ற உண் ணாவிரத போராட்டத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இ.கோபால், எஸ்என் இஏ நிர்வாகி ஜி.சேகர், ஏஐபிஎஸ் என்எல்இஏ நிர்வாகி சண்முகசுந் தரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரியில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு உண்ணாவி ரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பாஸ்கர், மாவட்ட செயலாளர் பி.கிருஷ் ணன், அதிகாரிகள் சங்க மாவட்ட தலைவர் கே.பாலமுரளி, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் சௌந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.