ஈரோடு, மே 11-ஈரோட்டில் மதநல்லிணக்க இஃப்தார் விருந்து வெள்ளியன்று நடைபெற்றது.தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க இஃப்தார் விருந்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி, மாவட்ட உதவி தலைவர்டி.விஜயகுமார், பொருளாளர் கே.நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட உதவி செயலாளர் அ.முகமது இஸ்மாயில் வரவேற்றார். மாநில பொது செயலாளர் ப.மாரிமுத்து மதநல்லிணக்கம் குறித்து உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் அல் அமீன் பொறியியல் கல்லூரியின்பொருளாளர் கே.கே.ஏ.சையது அகமது அலி,ஈரோடு இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தாளாளர் இ.கே.எம்.முஹம்மதுதாஜ் முஹயித்தன், அல்-அமீன் சங்கத்தின் கௌரவ தலைவர் எ.ஷாகுல் ஹமீது, அல்–அமீன் சங்கத்தின் தலைவர் ஆர்எஸ்.எ.அப்துல் காதர், ஐசிஒ அறக்கட்டளையின் தலைவர் எம்.எ.முகமதுநாசர் அலி,முத்தவல்லி ஜானத்துல் பாக்கியாத்பள்ளிவாசல் நிர்வாகிஎம்.எ.ரஃபியுதின், காசிபாளையம்பேரூராட்சியின் முன்னாள் தலைவர்கே.துரைராஜ்,ஈரோடு மாநகராட்சியின் முன்னாள்பொறியாளர் வி.சுப்பிரமணியன், மாவட்டக்குழுஉறுப்பினர்எ.அம்மணி அம்மாள் உட்பட பலர்பங்கேற்றனர். நிறைவாக சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலக்குழு உறுப்பினர் என்.முகமது அப்துல் காதர் நன்றி கூறினார்.