tamilnadu

இணைய வழியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - ஆட்சியர் தகவல்

கோவை, அக்.12- கோவையில் விவசாயிகளுக்கான குறைதீர்கூட்டம் இணையவழியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசா மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது. தற் சமயம் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், இணையவழியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அக்.16 ஆம் தேதி (வெள்ளியன்று) துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. எனவே, விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மேற்குறிப்பிட் டுள்ள தேதியில் சென்று பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.