சேலம்,செப்.4- சேலத்தில்,கிராமப்புற பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் புதனன்று நடைபெற்றது. சேலம் வீராணம், சின்னனூர் பகுதியை சேர்ந்த கிராமப் பகுதி பெண்களுக்கு தோல் பொருட்கள் மூலம் வாழ்வா தாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் மத்திய அரசு தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிராமப்புற பகுதி களில் வாழும் பெண்களுக்கு பயிற்சி மற்றும் உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இதையடுத்து பயிற்சி முடிந்த பின் அவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப் படுகிறது. மேலும் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரேம் எஜுகேஷனல் மற்றும் தொழில் மேம்பாட்டு அறக்கட்டளை, மத்திய அரசு திறன் மேம் பாட்டுத்துறை உடன் இணைந்து சேலம் வீராணம் பகுதியில் உள்ள சின்னனூர் கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தோல்பொருட்களை கொண்டு தையல் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி கடந்த முப்பது நாட்களாக வழங்கப்பட்டன. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இப்பயிற்சியால் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி யாக இருப்பதாக தெரிவித்தனர். இதில் பயிற்சி ஒருங்கி ணைப்பாளர் ஜான் பிரேம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.