tamilnadu

img

வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56- ஐ ரத்து செய்க

தாராபுரம், ஆக. 3 - இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 56 -ஐ ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாராபுரம் வட்டக் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 13 வது வட்டக்கிளை மாநாடு வருவாய்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. வட்டக் கிளை தலைவர் பி.ராஜி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஆர்.ஞானசேகரன் தொடக்கவுரை யாற்றினார். என்.ஈஸ்வரமுர்த்தி, சி.பாலராஜசேகர் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்து பேசினர். இம்மாநாட்டில் தாராபுரம் நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறுவிடவேண்டும். தாராபுரம் நகரில் உள்ள முதல் கிளை நூலகத்தில் ஐஏஎஸ், ஜபிஎஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க வேண்டும். புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்ப டுத்த வேண்டும். மத்திய அரசு வெளி யிட்டுள்ள தேசிய கல்வி கொள்கையை திரும்ப பெறவேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில் வட்டக் கிளை இணை செயலாளர் எம்.மேக லிங்கம் நன்றி கூறினார். முன்னதாக, இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வட்டக்கிளை தலைவராக பி.ராஜி, செயலாளராக என்.ஈஸ்வர மூர்த்தி, பொருளாளராக சி.பாலராஜ சேகர் மற்றும் துணை தலைவர்களாக மேகலிங்கம், சுப்பிரமணி, ரீட்டா, இணை செயலாளர்களாக மாசிலா மணி, லோகநாதன், விதுர்வேந்தன், ஜெயந்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், புதிய நிர் வாகிகளை அறிமுகப்படுத்தி மாவட்ட தலைவர் ஆர்.பாஸ்கரன், செயலாளர் அம்சராஜ் ஆகியோர் நிறைவுரை யாற்றினர்.