தருமபுரி, ஜூலை 27- தையல் தொழிலாளர்களுக்கு நலவாரிய பயன்களை உட னுக்குடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு தையல் கலைஞர்கள் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட சிறப்பு பேரவை கூட் டம் துரிஞ்சிப்பட்டியில் நடை பெற்றது. இப்பேரவைக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜே. ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செய லாளர் சி.நாகராசன், மாவட்ட பொருளாளர் ஏ.தெய்வாணை, மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்ட தலைவர் தீ. லெனின் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செய லாளர் சி.வஞ்சி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.தீர்த்தகிரி, வட்ட செயலாளர் எம்.கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இப்பேரவையில், தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தையல் தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர் கள் அதிக அளவில் வீடுகளில் தையல் தொழில் செய்து வருகின் றனர். எனவே பெண் தையல் கலைஞர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்கிட வேண்டும். கல்விஉதவித்தொகை, திரும ணம், மகப்பேறு உதவித்தொகை போன்ற நலவாரிய பணப்பயன் களை உடனுக்குடன் வழங்கிட வேண்டும். தையல் தொழிலா ளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். சீருடை தைக் கும் தொழிலாளர்களுக்கு தையல் கூலியை உடனுக்குடன் வழங்க வேண்டும். சீருடை எடுத்து செல் வதற்கு லக்கேஜ் வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதனையடுத்து, சங்கத்தின் புதிய ஒன்றிய தலைவராக ஏ. பிரேம்குமார், ஒன்றிய செயலாள ராக ஏ.சாந்திபாபு, பொருளாள ராக டி.கண்ணன், துணைத் தலை வராக ஜி.மணி, இணை செயலா ளராக ஏ.கண்ணகி உள்ளிட்ட 13 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது.