உதகை, நவ.17- குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனியன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் குன்னூரில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. சில வீடுகள் இடிந்தன. குன்னூர், மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்தது. இத னால் இச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனையடுத்து தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழு வினர், நெடுஞ்சாலைத்துறையினர், வனத் துறையினர் ஆகியோர் இணைந்து சாலை யில் விழுந்த மண்ணையும், மரத்தையும் அப்புறப்படுத்தும் பணியில் இரவு முழு வதும் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து ஓரளவிற்கு சீரானது. இருந்த போதும் இதனை ஒருவழிப் பாதையாக வாகனங்களை இயக்க காவல்துறையினர் அனுமதித்தனர். இதேபோல், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந் தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இப்பகுதி யில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாக னங்கள், ஒரு பிக்கப் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப் பட்டது. ஞாயிறன்று காலை இப்பகுதியில் உள்ள ஆற்றினை ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிக்கப் ஆட்டோவை முன் பகுதி சிதைந்த நிலையில் மீட்டு எடுத்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அடிக்கடி மழை பெய்வதால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.