ஆனைமலை, செப்.17- 48 நாட்களாக ஊதியம் வழங்கா மல் இழுபறியில் ஈடுபட்டுள்ள பொன் னாலம்மன் துறை கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகத்தைக் கண்டித்து செவ்வாயன்று ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை தாலு காவிற்குட்பட்ட பொன்னாலம்மன் துறை கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட் டது. இத்திட்டத்தின் மூலமாக வேட் டைக்காரன் புதூர், ஒடையகுளம், கோட்டூர் மற்றும் 38 சிற்றூராட்சி களுக்கும் குடிநீர் விநியோகம் செய் யப்பட்டு வருகிறது. இக்கூட்டு குடிநீர் திட்டத்தில் தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் 9 தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றிற்கு ரூ.445 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டு மாத ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் புதிய ஒப்பந்த தாரரிடம் குடிநீர் விநியோகம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஒப்பந்தம் பெற்ற நாள் முதல் இது நாள் வரையிலான 48 நாட்களாக கூட்டுக் குடிநீர் திட்ட ஒப்பந்த ஊழி யர்களுக்கான ஊதியம் வழங்கப் படவில்லை. இது குறித்து கேள்வி கேட்டாலும் அதிகாரிகளும், ஒப்பந்த தாரரும் முறையாக பதிலளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறப் படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஒப்பந்த ஊழியர்கள் செவ்வாயன்று மயிலாடுதுறையை அடுத்த ஆத்துப் பாறை என்னுமிடத்திலுள்ள பொன் னாலம்மன் துறை கூட்டுக் குடிநீர் நீருந்து நிலைய மையம் முன்பு அமர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் சங்க நிர்வாகி (சிஐடியு) தண்டபாணி என்பவர் கூறு கையில், குடிநீர் வடிகால் வாரியம் ஒப்பந்த ஊழியர்களுக்கான 9 பேருக் கும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை கடந்த 48 நாட்களாக ஊதியம் வழங்கவில்லை. இதனால் சொல்லில டங்கா துயரத்திற்கு ஆளாகியுள் ளோம். ஆகவே, உடனடியாக பொள் ளாச்சி கோட்ட தமிழ்நாடு குடிநீர் வாரிய உதவி பொறியாளர்கள் திரு மலைசாமி, நிர்மலாதேவி, ஒப்பந்த தாரர் சித்தார்த் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த் தையில் ஈடுபட வேண்டும். இல்லை யென்றால் வேலை நிறுத்தம் நாளை யும் தொடரும் என ஆவேசமாக தெரி வித்தார்.