திருச்சிராப்பள்ளி, ஜூலை 23- பாதுகாப்புத்துறை தொழிற்சாலை களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றியமைக்க மத்திய அரசு ஆலோ சகரை நியமிக்க வெளியிட்டுள்ள டெண் டர் அறிக்கையில் உள்ள முறைகேடு கள் சம்பந்தமாக மத்திய கண்கா ணிப்பு ஆணையத்திற்கு புகார். மேலும் முப்படைகளின் தலைமைத் தளபதி யான குடியரசுத் தலைவர் தலையிட வேண்டுமென பாதுகாப்புத்துறை தொழிற்சங்க சம்மேளனங்கள் முறை யிட்டுள்ளன. இதுகுறித்து அனைத்திந்திய பாது காப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறி யிருப்பதாவது: அரசுத் துறை நிறுவனமாக உள்ள 41 பாதுகாப்புத் துறை தொழிற்சாலை களை பொதுத்துறையாக மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைப்பது நாட்டின் பாதுகாப்பையே கேலிக்குரியதாக ஆகி விடும். ஆகவே அதனை திரும்பப்பெற வேண்டுமென இத்தொழிற்சாலை களில் பணிபுரியும் 80,000 ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங் களை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை யில் மத்திய அரசுக்கு அளித்துள்ள 11 கடிதங்களுக்கும் எந்த பதிலும் வராத சூழ்நிலையில். ஊழியர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தத்திற்கான தயா ரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொதுத்துறை நிறுவன மாக மாற்றுவதற்கு டெண்டர் அறி விப்பில் ஏராளமான முறைகேடுகள் உள்ளதாக செய்தி வெளியிடப்பட் டதை தொடர்ந்து பாதுகாப்பு துறை ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சம்மேள னங்கள் (AIDEF, INTUC, OMS) இப்பிரச் சனையில் முப்படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு முறைகேடுகள் உண்மை எனும் பட்சத்தில் இச்செயலில் ஈடு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புத்துறை தொழிற்சாலை களை ஜனாதிபதி நேரடி கட்டுப்பாட்டி லேயே அரசு நிறுவனமாக தொடர்ந்து செயல்பட வேண்டும். அதற்காக இத்தொழிற்சாலைகளை பலப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் எனவும் சம்மேளனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தமிழகத்தில் AIDEF, INDWF, OPMS சம்மேளனங்க ளோடு இணைந்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சம்மேளன மும், டாக்டர் அம்பேத்கர் தொழிற்சங்க அமைப்புகளும் விரைவில் துவங்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள் என அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.