ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, செப்.18- ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் கள் மீது பணிச்சுமைகள் மற்றும் நெருக்கடிகளை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி, சேலம் ஊரக வளர்ச்சித்துறை அலு வலகம் முன்பு புதனன்று பெருந் திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழைமக்களுக்கு வீடு வழங்கும் திட்டமான பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தை ஊழியர்கள் செவ்வனே செய்து வரும் நிலையில் அதிகாரிகள் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது. ஜல்சக்தி அபியான் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிதி ஒதுக்குவதோடு திட்டத்தை உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு போதிய ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இத் திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்கள் பணி யிடங்கள் அனைத்தையும் நிரந் தரப்படுத்த வேண்டும். மேலும் கணினி உதவியா ளர்கள் அனைவருக்கும் வரன் முறைப்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தில் அர்ப்பணித்துள்ள மாவட்ட, வட்டார முழு சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கவும், பணிவிதிகளை உருவாக்க வேண்டும். ஊரக பகுதி மக்களின் மேம்பாட்டுக்காக உள்ளாட்சி தேர்தலை நடத்தப்பட வேண்டும். கிராமசபை கூட்டங்களுக்கு உரிய அதிகாரத்தினை வழங்கி தீர்மா னங்களை தன்னிச்சையாக செயல் படுத்தும் அமைப்பாக மாற்ற வேண்டும். கிராமசபை கூட்டங் களை பரிசீலனைசெய்து வரன் முறைப்படுத்தவேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ருத்ரையன் தலைமைவகித்தார். மாநில துணைத்தலைவர் ஆர்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் கோபிநாத், பொருளாளர் சர்வோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமஜெயம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் வாழ்த்தி பேசினார். பின்னர் ஊரகவளர்ச்சி துறை திட்ட இயக்குனர் காளிதாசன் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி யிடம் கோரிக்கை மனுவை வழங் கினர். சேலம் இதேபோல் சேலம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நாம் திருவரங்கன், மாவட்டத் தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் ஜான் ஸ்டீல், மாவட்ட பொருளாளர் கோவிந்த ராஜி, மாவட்ட துணை தலைவர் எஸ்.வடிவேல் உள்ளிட்ட திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.