tamilnadu

img

ஆதிக்கவாதிகளும் வேண்டாம் - அடிமைகளும் வேண்டாம்

பொள்ளாச்சி, ஏப்.9-இந்த நாட்டிற்கு ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம் என அதிமுக- பாஜக கூட்டணியை சு.ப.வீரபாண்டியன் கடுமையாக சாடியுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்தை ஆதரித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தின் முன்பு பிரச்சார கூட்டம்நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சு.ப.வீரபாண்டியன் பங்கேற்று பேசியதாவது;- தில்லியிலே ஆதிக்கவாதிகள், சென்னை கோட்டையில் அடிமைகளாகவே இன்றுவரை இருக்கின்றனர். ஆகவே, நமக்கு ஆதிக்கவாதிகளும் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம்.  மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் இது. ஏனென்றால் மோடி மிகப்பெரியசர்வாதிகாரியாக மாறி வருகிறார். அவர்களுக்கு அதிமுக அரசும் அடிபணிந்துவிட்டது. இதேபோல், பொள்ளாச்சி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக மகேந்திரன் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற அவைக்கு சென்றுள்ளார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே 39 ஆவது இடத்தில் இருக்கும் மிகமோசமான நாடாளுமன்ற உறுப்பினராக மகேந்திரன் உள்ளார். ஆகவே, இவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். வருகின்ற தேர்தல் மிகமுக்கியமான தேர்தல் ஆகும். இதனை மக்கள் சரியாக பயன்படுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கு.சண்முகசுந்தரத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

;