tamilnadu

img

குடிநீர் பஞ்சத்தை போக்கிடுக கோவையில் திமுக ஆர்ப்பாட்டம் - கைது

கோவை, ஜூன் 22 -  குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் திமுக சார்பில் சனியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் குடிநீர் பற்றாக் குறை மிகக் கடுமையாக உள்ளது.  இந்நிலையில் குடிநீர் பிரச்சினை யைத் தீர்க்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன இயக்கம் நடத் தப்படும்திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வ ராஜ் தலைமையில்  சனியன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், குடிநீர்  பிரச்சனையை தீர்க்காத உள் ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் மு. கண்ணப்பன் உள்ளிட்ட  ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்ட செயலாளர் சி. ஆர்.இராமசந்திரன் தலைமையில் காவல்துறையின் அனுமதியை மீறி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி  குடங்களுடன் கலந்து கொண் டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சி.ஆர்.இராமசந்திரன், முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், தீர்மானக் குழு இணைச்செயலாளர் முத்து சாமி, மாவட்ட துணைச்செயலாளர் வடவள்ளி துரை உள்ளிட்ட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர்.