நாமக்கல், நவ.12- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் செவ்வாயன்று வழங்கப்பட்டது. தமிழகத்தில் பரவலாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் 8 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குமாரபாளையம் நகர செயலாளர் ஆறுமுகம், நகர குழு உறுப்பினர்கள் சக்திவேல், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.