tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

ஆந்திராவில் செம்மரம் கடத்தல் சம்பவம் நீதிமன்றத்தில் ஆஜராக தமிழக தொழிலாளர்களுக்கு சம்மன்

தருமபுரி, ஜூலை 11- ஆந்திராவில் செம்மரங்கள் கடத்தல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தமிழக தொழிலாளர்களுக்கு வியாழனன்று சம்மன் அனுப்பப் பட்டது.  ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழக தொழி லாளர்கள் 20 பேர் கடந்த 2015 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சியைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்ப வத்தில் தமிழக தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இதைத்தொடர்ந்து, சிறை யில் இருந்த தமிழக தொழிலாளர்கள் ஜாமீனில் வெளி வந்தனர். இந்நிலையில், செம்மரம் கடத் தல் வழக்கு விசாரணை ஆந்திர மாநி லத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் தமிழக தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என  நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனை தமிழக காவல்துறையினர், சித்தேரி,  கலசப்பாடி, அரசநத்தம், கோட்டப் பட்டி, வாச்சாத்தி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின தொழிலாளர்களிடம் அளித்தனர்.  இதையடுத்து, சம்மன் பெற்றுள்ள தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம், நெல்லூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

காவல் நிலையம் முன்பு  டிக்டாக் எடுத்த 3 வாலிபர்கள் கைது

தருமபுரி, ஜூலை 11-  தருமபுரியில் காவல் நிலையம் முன்பு டிக்டாக் செயலியில் வீடியோ எடுத்த 3 வாலிபர்களை காவல்துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியைச் சேர்ந்தவர்கள் ரிஷிகேஷ் (20), ஆதிகேசவன் (20) மற்றும் மதன்குமார் (15). இவர்கள் மூவரும் அடிதடி வழக்கில் கைதாகி ஜாமி னில் வெளிவந்தனர். இதனையடுத்து ஜூலை 9 ஆம் தேதி யன்று அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். அப்போது காவல் நிலையம் முன்பு மூன்று பேரும் சேர்ந்து டிக்டாக் செயலி மூலம்  வீடியோ எடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அதியமான் கோட்டை காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்கு பதிவு  செய்து கைது செய்தனர். இதன் பின்னர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி ரிஷிகேஷ் மற்றும் ஆதிகேசவனை சேலம் சிறையில் அடைத்தனர். மதன் குமாரை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.