tamilnadu

ஈரோடு மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்க கோரிக்கை

ஈரோடு, நவ.11- ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் (ஐவிஎப்) செயற்கை கருத்தரித்தல் மற்றும் ஆலோ சனை மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக் கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நீர், நிலம், காற்று போன்றவை கள் தொடர்ந்து மாசுபட்டு வருகிறது. சாய ஆலை யின் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேற்றப் படுகிறது. சிவப்பு நிறக் குறியீடு கொண்ட சாய ஆலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் புற்றுநோய் அதிகம் பாதிக்கும் மாவட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இதன்காரணமாக தற்போது செயற்கை கருத்தரிப்பு மேற்கொள்வோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகமாகி வருகிறது.  இவ்வாறு இயற்கையாக நடைபெற வேண்டிய கருத்தரிப்பு,  பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடை பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இத்தகைய சிகிச்சைக்கு பல லட்சம் செலவு செய்ய வசதியின்றி ஏழை, எளிய மக்களுக்கு குழந்தை என் பது கனவாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, ஈரோடு அரசு மருத்துவமனையில் மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்க ளன்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

போராட்டங்களுக்கு அனுமதியளிக்க விடுதலை சிறுத்தைதகள் கட்சி கோரிக்கை

ஈரோடு,நவ. 11- ஜனநாயக முறைப்படி நடத்தப்படும் போராட் டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இது குறித்து கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 4 மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த 6 முறை காவல்துறையின ரிடம் அனுமதி கோரி மனு அளித்தள்ளோம்.  ஆனால் கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சி மக் கள் பிரச்சனைக்காகவும், கோரிக்கைக்காகவும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அரசியல் சாசன சட்டத்தில் வழிவகை செய்கிறது. விடுதலை சிறுத்தை கள் கட்சி மட்டும் இல்லாமல் வேறு சில அமைப்புக ளுக்கும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. பிரசச்னைகளில் அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படும் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் மூச்சு திணறலால் குழந்தை பலி

தருமபுரி, நவ.12- இண்டூர் அருகே தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பச்சிளங்குழந்தை உயிரி ழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை  (32). இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சனியன்று குழந்தை தாய்ப்பால் அருந்தும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடும் பத்தினர் அந்த பச்சிளம் குழந்தையை சிகிச்சைக்காக இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து இண்டூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமுதாயக்கூடம் கட்டுமானத்தை ஆதிக்க சாதியினர் தடுப்பதாக புகார்

கோவை, நவ.11- ஆனைமலை கா.க.புதூரில் சமுதாய கூடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் ஆதிக்க சாதியினர் தலையீடு காரணமாக இதுவரை கட்டுமான பணிகள் துவக்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக் க்பபட்டது. இதுதொடர்பாக திராவிடத் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் வீரமுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆனைமலை வட்டத்திற்குட்பட்ட கா.க.புதூர் பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என் கிற அருந்ததியர் மக்களுக்களின் கோரிக் கையை ஏற்று தமிழக அரசு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே நிதி ஒதுக்கப்பட்டும் இதுவரை எவ்வித கட்டுமான பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை. இதன் பின்ன ணியில் ஆதிக்க சாதியை சார்ந்த சிலர் இங்கு கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு நிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த சாதிய வன்மத்தோடு தடுத்து நிறுத்தியவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  அவரை கைது செய்ய வேண்டும். மேலும், அருந்ததிய மக்களின் நீண்டகால கோரிக் கையான சமூதாய கூடத்தை உடனடியாக கட்டித்தர வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனார்.