tamilnadu

img

போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு உள்நோக்கம் கொண்டது

திமுக தோழமை கட்சிகள் ஆட்சேபம்


திருப்பூர், செப். 9 - இந்து முன்னணியின் வன்முறை வெறியாட்டத்தை எதிர்த்து ஜன நாயகரீதியான போராட்டத்துக்கு அனுமதி மறுத்திருப்பது உள் நோக்கம் கொண்டது என்று திமுக தோழமைக் கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வ ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு  மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவ பாலன், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ் ணன் உள்ளிட்டோர் கையெழுத் திட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகரகாவல் ஆணையர் ஆகியோ ருக்குஅளித்த மனுவில் கூறியிருப்ப தாவது: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியைப் பயன்படுத்தி இந்து முன்னணி அத்துமீறி அராஜகம் செய்ததைக் கண்டித்து ஆர்ப்பாட் டம் நடத்த முறைப்படி அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு  பிரச்சனையைக் காரணம் காட்டி  காவல் துறை அனுமதி மறுத்தது விநோதமாகவும், வேதனையா கவும் உள்ளது. கடந்த 15 நாட்களாக விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி என்ற பெயரில் நகரின் சட்டம் ஒழுங்கை இந்து முன்னணி சீர்குலைத்தனர். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் மிகப்பெரும் இடையூறு விளை வித்தனர். கடைகள், கல்வி நிறுவ னங்கள், தொழில், வர்த்தக நிறுவ னங்கள் ஆகியவற்றில் பலவந்த மாக மிரட்டிப் பணம் வசூலித்த னர். கேட்ட பணம் வழங்கவில்லை என்பதால் தாக்குதல் நடத்தியுள்ள னர். இதன் உச்சமாக கடந்த 5 ஆம் தேதி அங்கேரிபாளையம் சாலை யில் உள்ள வி.கே. கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்குள் 60க்கும் மேற் பட்ட இந்து முன்னணியினர் விநா யகர் சிலை வாகனத்துடன் அத்து மீறி பலவந்தமாக நுழைந்து மிகப் பெரும் அளவில் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். இத்தகைய சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த இந்து முன்னணியி னரின் அட்டூழியத்தைக் கண்டித்து ஜனநாயக முறையில் ஆர்ப்பாட் டம் நடத்திட அனுமதி கேட்டதை காவல் துறை ஏற்காமல் மறுத்துள் ளது ஜனநாயக விரோதமாகும். மேலும் ஜனநாயகரீதியாக அறி விக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இந்து முன் னணி அறிவித்தது, வன்முறை மூலம் சீர்குலைப்பதாக உள்ளது. அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் நடத்தும் அறப்போராட் டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, இப்பிரச்சனையில் தொழில் அமைதி, தொழிலாளர் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாது காப்பிற்காக பொறுப்புள்ள அரசி யல் கட்சிகள் என்ற முறையில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடத்தவுள்ள பொதுக்கூட் டம் மற்றும் போராட்ட நிகழ்ச்சிக ளுக்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.