சேலம், செப்.18 - தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தம் செய்யக் கூடாது என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்திய பாஜக அரசு தொழி லாளர்களுக்கு எதிராக சட்டங் களை திருத்தம் செய்து வருகிறது. குறிப்பாக தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முத லாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு பாதகம் விளைவிக்கும் செயலில் ஈடு பட்டுள்ளது. சுமைப்பணி தொழி லாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும். கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தம் செய்யக் கூடாது.
மத்திய, மாநில அரசுகள் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். லாரி டிரான்ஸ்போர்ட் குடோன் களில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு சட்ட சலுகை அமல் படுத்த வேண்டும். சேகோசர்வில் பணிபுரியும் சுமைப்பணி தொழி லாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் ஜில்லா சுமைப்பணி சங்க செயலாளர் எ.கோவிந்தன் தலைமை தாங்கினார். தொழி லாளர் சுமைப்பணி சம்மேளன பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.உதயகுமார், சேலம் ஜில்லா சுமைப்பணி சங்கத் தலைவர் ஆறு முகம், சேகோ ஸ்டார்ச் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து தொழி லாளர் சங்கங்களின் கூட்டமைப் பினர் கலந்து கொண்டனர்.