கோவை, நவ.6 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழ கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 30 சதவிகித போனஸ் வழங்க வலியுறுத்தி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், கவுண்டம்பாளை யத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் சிஐ டியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தின் மண்டல தலைவர் வி.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு டிஎன்சிஎஸ்சி சங்கத்தின் மாநில பொருளாளர் எம்.ஏழு மலை, மண்டல செயலாளர் கே.சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், தீபாவளி போனஸ் 30 சதம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்.