tamilnadu

img

கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்ட உத்தரவு வழங்குவதில் தாமதம்

தாராபுரம், ஜுன் 17 - தாராபுரம் பகுதியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்ட உத்த ரவு ஆணை வழங்குவதில் தாமதம் ஏற் பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர். தாராபுரம் புதிய மற்றும் பழைய அம ராவதி பாசனபகுதிகளில் சுமார் 5 ஆயி ரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப் பட்டு ஒரு மாதத்திற்கு முன்பே கரும்பு வெட்டும் பட்டத்திற்கு வந்தது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்தம் போட்டு விவசாயிகள் பதிவு செய்துள்ள னர். கரும்பு ஆய்வாளர்கள் விவசாயிகள் தோட்டத்திற்கு வந்து ஆய்வு செய்து வெட்டுவதற்கான உத்தரவை தந்தால் தான் கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப் பமுடியும். ஆனால் அதிகாரிகள் உத்தரவை வழங்க தாமதம் செய்கின்றனர்.  குறிப்பாக, கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் இயந்திரங்கள் 30 ஆண்டுகளானதால் பிழிதிறன் குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே வெட்டுவதற்கான உத்தரவு கொடுத்து ஆலைக்கு வந்த கரும்புகளையே பிழிய முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.  அதேநேரம், ஆலை நிர்வா கம் ரீலிஸ் ஆர்டர் கொடுத்தாலாவது விவ சாயிகள் வெளிமார்க்கெட்டில் கரும்பை விற்று விடமுடியும். ஆனால், அதிகாரிகள் மெத்தனபோக்கினால் கரும்புகள் காய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.