tamilnadu

img

திருப்பூர் மாவட்டத்தில் சிபிஎம் வேட்பாளர்கள்-போட்டியின்றி தேர்வு

உடுமலை, டிச. 20- உடுமலை மற்றும் குடிமங்கலம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டி யிட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர். திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, பள்ளபாளையம் ஊராட்சி 6 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட  கிருஸ்ணவேணி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே போல், குடிமங்கலம் ஒன்றியம், புக்கு ளம் ஊராட்சியில் 8 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மலர் போட்டி யிட்டார். இருவரும் வேட்பு மனு பரி சீலனையைத் தொடர்ந்து போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் ரெட்டிபாளையம் ஊராட்சி இரண்டா வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எம்.மணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கம்மாளக்குட்டை ஊராட்சி இரண்டாவது வார்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கே.ராஜ்பரத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட் டார்.

வேட்பாளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஊராட்சிமன்றத் தலை வர் வேட்பாளர் இடுவாய் - கே.கணே சன், வள்ளிபுரம் - என்.முருகேசன், பழங் கரை - டி.கலையரசி, வேலாயுதம்பா ளையம் - எஸ்.மயங்காத்தாள், வடுகபா ளையம் (அவிநாசி) - ஆர்.பழனிச்சாமி, பூமலூர் - ப.சுகுணா, சுக்கம்பாளையம் - பி.சரவணன்,  திருப்பூர்  ஊராட்சி ஒன்றியம் 5 ஆவது வார்டு வேட்பாளர் எஸ்.அப்பு சாமி, 8ஆவது வார்டு வேட்பாளர் எம்.உஷா மகேஷ், அவிநாசி ஊராட்சி ஒன் றியம் 19ஆவது வார்டு பி.முத்துசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் 12ஆவது வார்டில் எல்.ஜெயபிரகாஷ், பொங்க லூர் ஊராட்சி ஒன்றியம் 12ஆவது வார்டு எஸ்.பவித்ராதேவி, ஊத்துக் குளி ஊராட்சி ஒன்றியம் 9ஆவது வார்டு ஆர்.கருப்பசாமி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் 12ஆவது வார்டு என்.நாச்சிமுத்து, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 6ஆவது வார்டு வி.ரேணுகா தேவி ஆகியோர் போட்டியிடுகின்ற னர்.
 

;