tamilnadu

img

கோவையில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பு

கோவை, ஜூலை 01- கோவையில் புதனன்று 3 வயது குழந்தை உட்பட மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 570 ஐ  தாண்டியது. கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரு கிறது. செவ்வாயன்று 5 குழந்தைகள், 9 பெண்கள், 11 ஆண்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், புதனன்று மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 3 குழந் தைகள், 21 பெண்களும் அடங்குவர். செட்டி  வீதி பகுதியில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் பீளமேடு பாலன் நகர் பகுதியில் 8 பேருக்கும், சூலூர் கலங்கல் பகுதியில் 4 பேருக்கும், சாய்பாபா காலனி  சின்னம்மாள்  வீதியில் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 2 பேருக் கும், கரும்புக்கடை பகுதியில் 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கும், சவுதியில் இருந்து வந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் செல் வபுரம், ராமநாதபுரம், கோவில்மேடு, கணபதி, சலிவன் வீதி பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  கோவையில் கொரோனா தொற்று பரவ லாகி இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கோவை இஎஸ்ஐ  மருத்துவமனையில் கொரோனா தொற்று  காரணமாக சிகிச்சை பெற்று வந்த  வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர்  குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 570 ஐ தாண்டியது.