tamilnadu

img

வட்டார வளர்ச்சி அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா

இளம்பிள்ளை, ஆக. 21- வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரி யும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை யடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகமானது மூடப்பட்டது.

சேலம் மாவட்டம், சீரகாபாடியில் உள்ள வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும்  பெண் ஊழிய ருக்கு  கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்தவர்கள் உள்ளிட்ட 61 பேருக்கு வியாழனன்று கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதனால்  வட்டார வளர்ச்சி அலுவலக மானது 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மூடப்பட் டுள்ளது.

;