tamilnadu

img

ஐந்து காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு கோவை துடியலூர் காவல்நிலையம் மூடல்

கோவை, ஜூலை 12- கோவை துடியலூர் காவல் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல் நிலையம் தற்காலிக மாக பூட்டப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத் திற்கு மாற்றப்பட்டது. கோவையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலை யில், துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தொற்று ஏற்பட்ட 5 காவலர்களும் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிக் சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட னர். இதையடுத்து, துடியலூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினி கொண்டு சுத்தப்ப டுத்தும் பணிகள் நடைபெற்றது.  மேலும், தொற்று உறுதியான காவ லர்களுடன்  தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணியும், இக்காவல் நிலையத்தில் உள்ள அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான பணிகளை யும் சுகாதாரத்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர். ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்க ளுக்கு கொரோனா தொற்று உறுதி யாது, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

;