tamilnadu

img

சிறுவாணி அணைப்பகுதியில் தொடர் மழை: அணையின் நீர்மட்டம் உயர்வு

கோவை, செப். 20-  சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை யின் காரணமாக அணையின் நீர்மட்டம் 43.2 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மக்களின் முக்கிய நீர் ஆதரமாக சிறுவாணி நீர் இருந்து வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், நுாற்றுக்கணக் கான வழியோர கிராமங்களுக்கும் சிறு வாணி அணை நீர் குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு நீரை தேக்க முடியும். 49.53 அடி உயரம் கொண்ட இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 878.5 மீட்டர் உயர முள்ளது. 650 மில்லியன் கன அடி நீர் கொள் ளளவு கொண்டது.  

தென்மேற்கு பருவமழை துவங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் 37 மிமீ வரை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி சார் பாக சிறுவாணியில் இருந்து 96 எம்.எல்.டி தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 43.2 அடியாக தற் போது உள்ளதால், விரைவில் முழு கொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.