சேலம், ஆக. 5- சேலம் கூட்டுறவு நூற்பாலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி குடும்பத்தினருடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம், அம்மா பேட்டை பகுதியில் சேலம் கூட்டுறவு நூற்பாலை நெசவாளர்கள் சங்கங் கள் உருவாக்கிய இரண்டு நூற்பாலை கள் செயல்பட்டு வந்தது. சுமார் 1,600 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த இந்த ஆலையை, நவீனமயமாக்கிட மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக் கிய நிலையில், நிர்வாகம் அந்த பணத்தை கட்டாய ஓய்வுக்கு கட னாக எடுத்துக்கொண்டு ஆலையை புதுப்பிக்காமல் மூடிவிட்டது. இது சம்பந்தமாக தொழிலாளர் தீர்ப்பா யத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இச்சூழலில் எவ்வித முன்னனுமதியும் பெறாமல் நிர்வாகம் சட்டத்திற்கு புறம் பாக ஆலையை கலைத்து விட்டு, கூட்டுறவு நூற்பாலை சொத்துகளை குறைந்த விலைக்கு விற்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது. ஆலை நிர்வாகத்தின் இத்தகைய முறைகேடுகளை கண்டித்து சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி எம்.மோகன் ராஜ் தலைமையில் திங்களன்று சேலம் கூட்டுறவு நூற்பாலைகளில் பணியாற் றிய தொழிலாளர்கள் குடும்பத்து டன் ஆலையில் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், சேலம் கூட்டுறவு நூற்பாலை தொடர்ந்து இயங்கு வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த தொழிலாளர்கள் குடும்பத் திற்கு பணிக்கொடை வழங்க வேண் டும். வேலையில்லா காலத்திலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும். தொழி லாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளதை அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு நூற்பாலை சொத்துகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனை வரையும் அம்மாபேட்டை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.