கோவை, டிச. 15 – சென்னையை நோக்கி நடைபயணத் தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருக்கு பாராட்டு விழா நடை பெற்றது. போதையற்ற தமிழகம், வன்முறையற்ற தமிழகம் என்கிற முழக்கத்துடன் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தமிழகத்தின் இரண்டு முனைகளில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர். இதில் கோவை யில் இருந்து பங்கேற்ற மாதர் சங்க போராளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு யு.கே.சிஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினரும், மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளருமான ஏ.ராதிகா, செயற்குழு உறுப் பினர் எஸ்.கருப்பையா, அஜய்குமார், கட்சி யின் மூத்த தோழர் என்.வி.தாமோதரன் ஆகி யோர் பங்கேற்று நடை பயணம் மேற் கொண்ட மாதர் சங்கத்தினரை பாராட்டி கெளரவித்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.