tamilnadu

img

தோழர் குடும்பங்கள் சந்திப்பு விழா

சேலம், பிப். 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சேலம் வடக்கு மாநகர தோழர்களின் குடும்ப  சந்திப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. ஏற்காடு கிளாஸ் ஹௌசில் நடை பெற்ற இந்த சந்திப்பு விழாவிற்கு மாந கர செயலாளர் என்.பிரவீன்குமார் தலைமை வகித்தார். இதில், 15 கிளை களில் இருந்து 100க்கும் மேற்பட்ட தோழர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள், தம்பதியர்கள் அனைவ ருக்குமான பொதுவான அமர்வுகள் நடைபெற்றன. இதில் விளையாட்டு, தொலைநோக்கி மூலம் வான்வியல் காணு தல், ஒருவரையொருவர் பாராட்டுதல், நெகிழ்வான அனுபவங்கள் பகிர்தல், இணையர்களுக்குள் பிடித்தவை, பிடிக்கா தவை குறித்தான உரையாடல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை விருதுநகர் அமல் ராஜ், இரும்பாலை ஜெயமுருகன், ஏற்காடு தில்லைகரசி ஆகியோர் ஒருங்கினைத்த னர். இறுதியாக மாவட்டக்குழு உறுப் பினர் எம்.முருகேசன் நிறைவு செய்து பேசி னார். பின்னர் பங்கேற்ற அனைத்து குடும் பங்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. மேலும், இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.சேதுமாதவன், ஏற்காடு தாலுகா செயலாளர் நேரு, தாலுகாகுழு உறுப்பி னர் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.