tamilnadu

img

கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா- சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம்

கோவை, பிப். 29– கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கோவை காமராஜபுரத்தில் வெள்ளியன்று நடைபெற்றது.  கோவை கிழக்கு நகரக்குழுவிற்குட் பட்ட வடகோவை, காமராஜபுரத்தில் கம்யூ னிஸ்ட் இயகத்தின் நூற்றாண்டு துவக்கம் மற்றும் சிபிஎம் நிதியளிப்பு பொதுக்கூட் டம் என்.முருகேசன் தலைமையில் நடை பெற்றது. எம்.எம்.ராஜன் வரவேற்புரை யாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு வரலாறு,  செங்கொடி இயக்கம் கடந்த வந்த பாதை மற்றும் தற்போ தைய அரசியல் நிலை குறித்து மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி சிறப்புரை யாற்றினார். மேலும், மாவட்டக்குழு உறுப் பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகர செய லாளர் என்.ஜாகீர், நகரக்குழு உறுப்பினர் கள் என்.செல்வராஜ், ராஜன், சீலாராஜ், சந் தோஷ் குமார் உள்ளிட்டோர் உரையாற் றினர்.  முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக கோவை கிழக்கு நகரப் பகுதியில் கட்சியின் ஊழியர்கள் வீடு வீடாக சேகரித்த ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்தை தலைவர்களிடம் வழங்கினர்.  இந்நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். நிறைவாக எம்.சங்கவி நன்றி கூறினார்.