அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத்தின் 5 ஆம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி கடலூரில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலக் குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டப் பொருளாளர் தைனிஸ்மேரி, நகரச் செயலாளர் சாந்தகுமாரி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்புராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், நகர் குழு உறுப்பினர்கள் வி.திருமுருகன், கே.ஸ்டாலின், டி.எஸ்.தமிழ்மணி, மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.