tamilnadu

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

மேட்டுப்பாளையம், மே 20-மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.மேட்டுப்பாளையத்தை அடுத்த தொட்டிபாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். அரசு பேருந்து ஓட்டுநர். இவரது மகன் தினேஷ்குமார்(19). கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார்.சம்பவத்தன்று, தனது நண் பர்கள் சஞ்சய்(18), வருண்(19), ஸ்ரீஹரி(16), சூரியா(19)ஆகியோருடன் நெல்லித்துறை அடுத் துள்ள விளாமரத்தூர் குண்டுக் கல்துறை பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றுள்ளார். 5 பேருக்கும் நீச்சல் தெரியாது. தினேஷ்குமார் ஆற்றில் இறங்கி குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரம் போராடி தினேஷ்குமாரின் உடலை மீட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப் பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;