tamilnadu

img

ஏற்காட்டில் திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஏற்காடு, செப்.6- ஏற்காட்டில் நடைபெற்று வரும்  திட்ட பணிகள் குறித்து  வியாழனன்று மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு மேற் கொண்டார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றிய நிர்வாகம் சார்பில்  உணவு மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பகுதிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், அதன் செயல் முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதன் இயக்கத்தை கண்டறிந்தார். பின்னர், கிளியூர் கிராமத்தில் தனியார் நிர்வாகத்தினர் பள்ளி கட்டு வதற்காக அனுமதி கேட்டிருந்த நிலையில், பள்ளி கட்டப் படவுள்ள இடத்தை பார்வையிட்டார். மேலும் அண்ணா பூங்கா, வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக குடியிருப்பு கட்டுமான பணிகள், புதிதாக திறக்கப்பட்ட சுற்றுலாத் தல மான பட்டு பண்ணை  உள்ளிட்ட இடங்களில் ஆய்வு  மேற்கொண்டார்.