கோவை, செப்.15- ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போனை சார்ஜில் போட்ட மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்ப டுத்தியுள்ளது. கோவை சங்கனூர் சாலை காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சந்துரு (16) பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி திறக்கபடாத காரணத்தால் சந்துரு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தார்.
இந்நி லையில், திங்களன்று தன்னுடைய செல்போனை சார்ஜ் செய்ய முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக் கியதில் மயக்கமடைந்தார். இதனையடுத்து, மாணவனை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அப்போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்ப குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.