திருப்பூர், மே 13 – மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக கோவை – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் மதுரை இடையே மே 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.இதுதொடர்பாக திங்களன்று தென்னக ரயில்வே சேலம் கோட்டத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வண்டி எண் 56320 கோவை – நாகர்கோவில் விரைவு பாசஞ்சர் ரயில் திண்டுக்கல் – மதுரை இடையே மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. எனவே கோவையில் இருந்து புறப்படும் ரயில் திண்டுக்கல் வரை செல்லும். அதேசமயம் வண்டி எண் 56319 பாசஞ்சர்விரைவு ரயில் திண்டுக்கல் முதல் கோவை வரை ஏற்கெனவே உள்ள அட்டவணை நேரப்படி இயக்கப்படும்.அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் 56319 நாகர்கோவில் – கோவை விரைவு பாசஞ்சர் ரயிலும் மதுரை – திண்டுக்கல் இடையே மேற்படி மே 15 முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதால், அந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். மறுபடியும் வண்டி எண் 56320 என மாற்றம் செய்யப்பட்டு அதே அட்டவணை நேரப்படி மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்குத் திரும்பச் செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.