tamilnadu

img

நிரம்பும் நீராதாரங்கள்- பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவை, ஆக.7- கோவையில் நீராதாரங்கள் நிரம்பி வரும் நிலையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆக.7 ஆம் தேதி தேசிய கைத் தறி நாளாக கொண்டாடப்படு கிறது. கைத்தறி பொருட்களின் பயன்பாட்டை இளைய தலை முறைக்கும், மக்களுக்கும் விளக் கும் நோக்கில் கோவை மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில், கைத்தறி பொருட்களின் கண்காட்சி மற் றும் விற்பனையை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் கைத்தறியில் நெய்யப்பட்ட கோவை காட்டன், நெகமம் காட் டன், கோரா, பட்டு, பெட்ஷிட், துண்டு, சுடிதார் வகைகள், ஆர்கானிக் காட்டன் ஆகியவை களான சேலைகள் ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரையில் விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்தது.   இக்கண்காட்சி குறித்து கைத்தறி கூடுதல் இயக்குநர் ரகு நாத் கூறுகையில், “கடந்த ஆண்டு  ரூ.5 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.8 கோடிக்கு இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண் காட்சி மற்றும் விற்பனை ஐந்து  நாட்கள் நடக்கும். மாணவ, மாண வியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், குமரகுரு கல்லூரியில் 3 நாட்களும், கொங்கு நாடு மற்றும் கலைஞர் கருணா நிதி கல்லூரியில் 2 நாட்களும் கைத்தறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேசுகையில், நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் கைத்தறி பொருட்களை பள்ளி, கல்வி நிறு வனங்கள், தனியார் துறை நிறு வனங்களைச் சேர்ந்தவர்கள் நெசவாளர்களிடம் வாங்க வேண் டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, கோவையில் பெய்து வரும் மழை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், தென்மேற்கு பருவமழை தாமத மாக துவங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கோவையின் நீராதாரமான பில்லூர் மற்றும் சிறுவாணி அணைகள் நிரம்பி வருகின்றன.

இதனால், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவர். மேலும், பில்லூர் அணை  100 அடி எட்டி உள்ளது. அணை நிரம்பி 16 ஆயிரம் கன அடி தண் ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் 28.5 அடி தண்ணீர் உள்ளது. மேலும் அணைப் பகுதிகளில் நல்ல மழை தொடர்ந்து பெய்து  வருகிறது. இன்னும் 4 நாட்க ளுக்கு மழை இருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போது, ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. பில்லூர் அணையில் இருந்து வெளியேறும் நீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற் படாமல் இருக்க அனைத்து பாது காப்பு நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக அதி காரிகள் தொடர்ந்து கண் காணித்து வருகின்றனர். மழை பெய்து வரும் நிலையில் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறைக ளுடன் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருகிறோம். மேலும், எந்த மாதிரியான சூழல் வந்தாலும், அதை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது, கோவைக்கு இன்னும் மழை  வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மழை வரும் என காத்திருக்கிறேன் என்றார்.