tamilnadu

கோவை மற்றும் தாராபுரம் முக்கிய செய்திகள்

நெருக்கடியில் தமிழக நூற்பாலைகள் 1.20 லட்சம் பேர் வேலையிழப்பு

கோவை, ஆக.22- நூல் இறக்குமதியில் ஏற்பட்ட குளறுபடியால் தமிழ கத்தில் 255 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் 1.20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தொழில்துறை யினர் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூற்பாலை கள் உள்ளன. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் மட்டும் 600க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள் ளன. இதனால், 60 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியா கவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ள னர். இந்த நிலையில், இந்தியாவில் இருந்து சீனா நூல் களை இறக்குமதி செய்வதை படிப்படியாக குறைத்துக் கொண்டது. இதற்கு பதிலாக பாகிஸ்தான், வியட்நாம், பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.  இதனால் நூற்பாலைகள் கடும் நஷ் டத்தை சந்தித்து வருகின்றன. இதனால், நூற்பாலைகளை நடத்த முடியாத நிலையில் உரிமையாளர்கள் உள்ளனர்.கடந்த 2017-19 ஆம் ஆண்டு  காலகட்டங்களில் தமிழகத்தில் 225 மில்கள் மூடப்பட் டுள்ளன. கோவை மற்றும் திருப்பூரில் 35க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழு வதும் சுமார் 1.20 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந் துள்ளனர். கோவை, திருப்பூரில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.  இதுகுறித்து தொழில்துறையினர் கூறியதாவது, நூல் ஏற்றுமதிக்கு சீனாவை நம்பியிருந்த நிலையில், இறக்கு மதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பருத்தி விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்த நெருக்கடி நிலையை போக்க  மத்திய அரசு பூஜ்ஜிய சதவிகித இறக்குமதியை கொண்ட  நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். நூற்பாலை களுக்கான மூலப்பொருட்களை பூஜ்ஜிய சதவிகித அடிப் படையில் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொழில்துறையினர் கூறி யுள்ளனர்.

வண்டல் மண் கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரியை எடுத்துச் சென்ற உரிமையாளர் மீது புகார்

தாராபுரம், ஆக. 22 - தாராபுரத்தில் உப்பாறு அணையிலிருந்து வண்டல் மண் விற்பனைக்காக கொண்டு சென்ற லாரியை கனிம வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆனால் பறிமுதல் செய்த லாரியை காவல் துறையினர் முன்னிலையில் உரி மையாளர்கள் எடுத்து சென்றனர். தாராபுரம் உப்பாறு அணையில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் போர்வையில் வண்டல் மண் எடுத்து வணிக ரீதியாக விற்பனை செய்வதாக திருப்பூர் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநருக்குத் தகவல் வந்தது. தகவலின் பேரில் கனிமவளத்துறை இயக்குநர் வள்ளல் மற்றும் குழு வினர் தாராபுரம் கொட்டாப்புளிபாளையம் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வண்டல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தினர். ஆனால் லாரியை நிறுத்திய ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.  தகவல் அறிந்து லாரி உரிமையாளர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, பர்மிட்டை சோதனை செய்தனர். அது விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பர்மிட் என்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்வதாக உதவி இயக்குநர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வண்டல் மண் எடுக்கும் பிற லாரி உரிமையாளர்கள் ஒன்று திரண்டு உதவி இயக்குநரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.  சம்பவ இடத்திற்கு காவல் துறை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், ஜெயக்குமார் ஆகியோர் வந்து  வாக்கு வாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். லாரி உரிமையாளர்கள் தரப்பில் உப்பாறு அணையில் இருந்து செலாம்பாளையம் கொண்டு செல்வதற்கு பர்மிட் வழங்கப்பட்டுள்ளதாகவும், வழியிலேயே உதவி இயக்கு நர் லாரியை மடக்கி ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, காவல் துறையினர் முன்னிலையிலேயே பறிமுதல் செய்யப்பட்ட லாரியை எடுத்து சென்றனர்.  இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியரிடம் அறிக்கை சமர்பித்த பின்னர், உதவி இயக்குநர் வள்ளல் தாராபுரம் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் சின்னியகவுண் டம்பாளையம் ரமேஷ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில்  ஆய்வாளர் கோபிநாத் விசாரணை நடத்தி வருகிறார்.

ரூ.3.21 கோடிக்கு தேயிலை ஏலம்

கோவை, ஆக. 22- கோவையிலுள்ள தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.21 கோடிக்கு தேயிலை ஏலம் போனது. கோவை மேடுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் புதன்கிழமை தேயிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வரு கின்றனர். இதன்படி, இந்த வாரம் புதனன்று தேயிலை வர்த்தக மையத்தில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 2 லட்சத்து 56 ஆயிரத்து 241 கிலோ தேயிலை தூள் ஏலத்திற்காக வந்தது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 898 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 64 சதவிகிதம் ஏலம் போனது. இதில் 37 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் 90 ரூபாய் 4 காசுகளுக்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 90 ரூபாய் 76 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.2 கோடியே 30 லட்சத்து 71 ஆயிரத்து 939க்கு தேயிலை தூள் ஏலம் போனது. மேலும், இலை ரக தேயிலை 95 ஆயிரத்து 458 கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில் 82 ஆயிரத்து 759 கிலோ  ஏலம் போனது. இது 87 சதவிகிதம் ஆகும். இதில் 25 ஏல தாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.94.59க்கு ஏலம் போனது. கடந்த வாரம் ஒரு  கிலோ இலை ரக தேயிலை ரூ.93.25க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.1.34 காசுகள் விலை குறைந்துள்ளது. மொத்தமாக ரூ.90 லட்சத்து 29 ஆயிரத்து 372க்கு இலை ரக தேயிலை ஏலம் போனது. ஏலத்தின் படி, மொத்தமாக 3 லட்சத்து 51 ஆயிரத்து 699 கிலோ தேயிலை தூள் மற்றும் இலைரக தேயிலை ஆகியவை ரூ.3 கோடியே 21 லட்சத்து 311க்கு ஏலம் போனது.