tamilnadu

திருப்பூர் மற்றும் தாராபுரம் முக்கிய செய்திகள்

திருப்பூரில் தேசிய கல்விக்கொள்கை வரைவு நகல் எரிப்புப் போராட்டம்

திருப்பூர், ஜூன் 25 - இந்தியாவில் கல்வியை காவிமயப் படுத்தி, வணிகமயமாக்கும் பிற்போக்குத் தனமான தேசிய கல்விக்கொள்கை வரைவு நகலை இந்திய மாணவர் சங்கத்தினர் தீ யிட்டுக் கொளுத்தினர். ஏழை, எளிய மக்களுக்குக் கல்வியை எட்டாக்கனியாக்கும் மத்திய அரசின் கல்விக் கொள்கை வரைவு எதிர்த்து நகல்  எரிப்புப் போராட்டம் நடத்தும்படி இந்திய  மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு அழைப்பு  விடுத்திருந்தது.  அதன்படி திருப்பூரில் செவ்வாயன்று இப்போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரிக்கு முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது, மாவட்டத் துணைத்தலைவர் பிரவீன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு கல்விக் கொள்கை வரைவு நகலை தீயிட்டு எரித் தனர். அத்துடன் கல்விக் கொள்கையை கை விடக் கோரியும் முழக்கமிட்டனர். 

தாராபுரத்தில் நாய் கடித்து 25 ஆடுகள் பலி- விவசாயி வேதனை

தாராபுரம், ஜூன் 25- தாராபுரம் அருகே நாய் கடித்து 25 ஆடுகள் பலியானது. நாய்கடித்து ஆடுகள் பலியாவது தொடர்வதால் விவசாயி வேத னையடைந்துள்ளனர். தாராபுரம் பூளவாடி தொப்பம்பட்டியை அடுத்த காளியப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி (35). இவருக்கு சொந்தமான நஞ்சியபழநந்தான் தோட்டத்தில் 30 ஆடுகள் வளர்த்து வரு கிறார். வழக்கம்போல் ஆடுகளை பட்டியில்  அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். திங்களன்று அதிகாலை வந்து  பார்த்தபோது 6 நாய்கள் பட்டியில் உலவிக் கொண்டிருந்தது. பழனிச்சாமி பட்டியை  திறந்தவுடன் நாய்கள் தப்பி சென்று விட்டது. உள்ளே சென்று பார்த்தபோது 25 ஆடுகள் பலியாகியிருந்தன. 5 ஆடுகள் உயிருடன் இருந்தது.  இதுகுறித்து வருவாய்த்துறையினரும், கால்நடை துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து தாராபுரம் பகுதியில் கடந்த 6 மாதத்தில் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய்கள்  கடித்து பலியான சம்பவத்தால் விவசாயிகள்  வேதனையடைந்துள்ளனர். உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆடுகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.