tamilnadu

கோவை, தேனி , ஈரோடு முக்கிய செய்திகள்

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு  ஆர்டர்கள் குறைந்து வருவதாக தங்கநகை தொழிலாளர்கள் வேதனை
கோவை, ஆக. 10- தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன்  விற்பனை சரிந்துள்ள சூழலில், ஆர்டர்கள் குறைந்து வாழ்வா தாரம் மிக மோசமாகி வருவதாக தங்கநகை தொழி லாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்கம் விலை வரலாறு கானாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தை பொருத்தவரையில் ஒரு  தங்கம் கிராம் ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது. அதாவது சவரன் ரூ.24 ஆயிரத்து 168க்கு விற்பனையானது. அப்போது முதல் தங்கத்தின் விலை குறையவில்லை. மாறாக  விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தொடர்ந்து, விலை யேற்றத்தால் தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். ஆனால், சாமானிய மக்கள் மிகுந்த வருத்த மடைந்துள்ளனர். கோவையை பொருத்தவரையில் ஒருகிராம்  ஆபரண தங்கம் ரூ.3 ஆயிரத்து 571க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பா ளர்கள் கூறுகையில், அமெரிக்க-சீனா வர்த்தக போர், அமெ ரிக்காவில் வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் குறைப்பு மற்றும்  பங்குசந்தை சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து அமெரிக்க டாலர் மதிப்பு குறை கிறது. மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த  பட்ஜெட்டில் 2.5 சதவிகிதம் அதிகரித்தது மத்திய அரசு. இத னால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 வரை அதிகரித்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வருவதால் வியாபாரம் 60 சத விகிதம் வரை குறைந்துள்ளது. 2.5 டன் எடை அளவிலான வேலையும் குறைந்துவிட்டது என தெரிவித்தனர்.  இதுகுறித்து தங்க நகை தொழிலாளிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தங்க பட்டறை தொழிலை நம்பி 1.5 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எங்களுக்கு சத விகித அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது. தங்க நகை  செய்ய 3 சதவிகிதம் சேதாரம் வழங்கப்பட்டு வந்தது. அவ்வ போது விலை எகிறும் போது எங்களுக்கு 2 சதவிகிதம் தான்  கூலி வழங்கப்படும். தற்போது தங்கம் விலை வரலாறு காணாத  வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் கடைகளில் வியா பாரம் குறைந்துவிட்டது. எனவே, விற்பனையாளர்கள் எங்களுக்கு ஆர்டர்கள் கொடுப்பது வெகுவாக குறைந்துவிட்டது. வாழ்வாதரம் மிக  மோசமாகி வருகிறது. வருடத்தில் 4 மாதங்கள் தொழில் முழு மையாக நலிவடைந்துவிடும் நிலை உள்ளது. தங்கநகை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

கந்து வட்டி சட்டத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு 
தேனி, ஆக. 10-கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்தவர் சாந்தி 55. இவர்  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரனிடம் அளித்த புகாரில், ‘கம்பம் குரங்கு மாயன் தெருவில் உறவினர்கள்  பெயரில் சர்வே எண் 936ல் வீட்டடி மனைகள் உள்ளன. அதே பகுதியை சேர்ந்த 8 பேரிடம் அவசர தேவைக்காக ரூ.3 லட்சம்  பணத்தை கடனாக பெற்றேன். கடனை ரூ.5 லட்சம் வட்டியுடன் திரும்ப செலுத்தினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் வட்டிப்பணத்திற்கு பதிலாக , வீட்டடி மனையை கம்பம் பத்திர  எழுத்தர் அரசைய்யாவின் உதவியுடன் ஜூன் 19ல் மோசடி  செய்து கிரையம் பதிவு செய்துள்ளனர்.  அதற்கு உடந்தையாக அங்குசின்னவாய்க்கால் தெருவை சேர்ந்த ராமசாமி, சுருளிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்த மனோ கரன் கையெழுத்திட்டுள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசா ரிக்க கம்பம் வடக்கு காவல்நிலையத்திற்கு எஸ்.பி., உத்தர விட்டார். இந்நிலையில் பத்திர எழுத்தர் அரசைய்யா, முத்து,  பிரதீபன், கேசவன், ஜனணி, ஆதிவேஸ்வரன், ராமசாமி, மனோ கரன் ஆகிய எட்டு பேர் மீது மோசடி செய்து ஏமாற்றுவது, கந்து  வட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிளாஷ்டிக் அகற்றம் 
ஈரோடு, ஆக. 10-உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் வனப்பகுதியில் கல்லூரி மாணவ, மாணவி யர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கபட்டு அப்புறப்ப டுத்தப்பட்டது. உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ரீடு தொண்டு நிறு வனம் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை சார்பில் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனசரகப்  பகுதிகளில் சத்திய அரசு கலைக்கல்லூரி சார்பில் மாணவ, மாணவியர்கள் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளால் போடப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணியில் வெள்ளியன்று ஈடுபட்டனர். இதில், கடம்பூர் முதல் டி.என்.பாளையம் வரை 16 கிலோ மீட்டர் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கபட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பிளாஸ்டிக் அகற்றும் பணியை வனசரகர் வெங்கடா சலம் தொடங்கி வைத்தார். ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு  பிளாஸ்டிக் எடுக்கப்பட்டது. ரீடு நிறுவனம் திட்ட ஒருங்கி ணைப்பாளர் ப.பழனிச்சாமி, கிருஷ்ணன், சசி, மகேஷ்வரி உள்ளிட்ட ஏராளமான கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.