கோவை, மார்ச். 2 – கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பொது தேர்வை எழுதினர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்.2ல் துவங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பொதுத்தேர்வை, 7276 பள்ளிகளில் இருந்து 8,16,359 மாணவர்கள் எழுதுகிறார்கள். இத்தேர்விற்காக 3012 மையங் கள் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்ப டையில் 600 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித் துள்ளதாவது, கோவை மாவட்டத் தில் 116 மையங்களில் 34,286 மாணவர்கள் தேர்வு எழுதினர். முறைகேடுகளை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது. தேர்வு நேரம் காலை 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறுகிறது என்றார். மேலும், பள்ளி கல்வி இயக்குந ரகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற் பட்ட உயர் மட்ட அதிகாரிகள் சிறப்பு பார்வையாளர்களாகவும், 45,000க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் தேர்வுகளை கண்காணிப் பார்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். ஆள்மாறாட்டம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.