tamilnadu

img

மோட்டார் தொழிலை நசுக்கும் இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு கைவிட வலியுறுத்தி சிஐடியு மோட்டார் சங்கம் ஆர்ப்பாட்டம்

 திருப்பூர், ஜூலை 12 - மோட்டார் தொழிலை நசுக்கும்  இன்சூரன்ஸ் பிரீமியர் கட்டண  உயர்வைக் கைவிட வலியுறுத்தி சிஐடியு மோட்டார் மற்றும் ஆட்டோ  தொழிலாளர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவ லகம் முன்பாக வெள்ளியன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்கு சிஐடியு திருப்பூர் மாவட்ட மோட்டார் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் லேபர் யூனியன் தலைவர் எஸ்.விஸ்வ நாதன் தலைமை வகித்தார். இதில்  இரண்டாம் முறையாக பொறுப் பேற்றிருக்கும் பாரதிய ஜனதா அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வர வேண்டும், ஆட்டோ, கால்  டாக்சிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுப் போக்கு வரத்துக்குரிய ஆட்டோ, டாக்ஸி நிறுத்தங்கள் வரையறை செய்து தர வேண்டும். ஆர்டிஓ அலுவலக முறைகேடுகள் மற்றும் காவல் துறையினரின் அத்துமீறல்களைத் தடுத்திட வேண்டும். மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக் கணக்கானோரின் வாழ்க்கையைப் பறிக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தைக் கைவிட வேண்டும். அபராத கட்டண உயர்வைக் கை விட வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம். சந்திரன், மோட்டார் சங்க மாவட்டச்  செயலாளர் ஒய்.அன்பு, ஆட்டோ சங்க நிர்வாகி சிவராமன் உள்ளிட் டோர் உரையாற்றினர். சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், அருண் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.