tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவை

சேலம், ஜன. 6- சேலத்தில் சிஐடியு அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு அகில இந்திய 16 ஆவது மாநாடு சென்னையில் ஜன.23 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இம்மாநாட்டை வெற்றிக ரமாக்கும் வகையில் நிதியளிப்பு பேரவைக் கூட்டம் சேலம் விபிசி நினைவகத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் பொ.பன்னீர்செல்வம் தலைமையில் நடை பெற்றது.  இதில் தொழிலாளி வர்க்கத்தினரிடம் சேகரிக்கப்பட்ட ரூ.4 லட்சம் நிதியினை சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு பெற்றுக் கொண்டு சிறப்புறையாற்றினார். இப்பேரவைக் கூட்டத்தில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எஸ்.கே.தியாகராஜன், ஏ.கோவிந்தன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற் றனர்.

;