tamilnadu

img

அரசு விடுதி மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சி

உடுமலை, நவ. 22- தேசிய நூலக வார விழாவை யொட்டி உடுமலையில் அரசு விடுதி மாணவிகளுக்கு இலவச சிலம்பு பயிற்சியளிக்கப்பட்டது. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 ல் 52 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. கடந்த நவ.14 ஆம் தேதி துவங்கிய இவ்விழா 20ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையொட்டி போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவ மாணவியர்களுக்கான புதிய போட்டித் தேர்வு நூல்கள் கண்காட்சி நடைபெற்றது. வாசிப்பை நேசிப் போம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவு நாள் விழா உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. நூலகர் வீ.கணேசன் தலைமை வகித்தார். உடுமலை காவல் துறை உதவி ஆய்வா ளர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை யின் மாணவிகளுக்கான இலவச சிலம்ப பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். மேலும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளித்து மாணவ, மாணவியர்களை வெற்றி பெறச் செய்த ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், ஜெய்கணேஷ் ஆகியோருக்கும், கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட ஆசிரியர் கண்ண பிரான், அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் திருமாவளவன் ஆகியோ ருக்கும், போட்டித் தேர்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு களும், நினைவு பரிசுகளும் வழங்கப் பட்டன. 

நூலகர் வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார் வாசகர் வட்ட ஆலோசகர்  அய்யப்பன், மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி காப்பாளர் ‌புருசோத்தமன்,‌ வாசகர் வட்ட பொருளாளர் சிவக்குமார் மற் றும் அரசு மாணவியர் விடுதி காப்பா ளர் சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட் சுமி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.  இதேபோல், மலையாண்டி பட்டி ணம் ஊர்ப்புற நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியம், கட்டுரை, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச் சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் அ.சிவராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜெ.செல்வம், முத்து சாமி, ஜானகி, ‌சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட உறுப்பினர் அருட்செல்வன் நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்தார். நிறைவாக நூலகர் மலர்கொடி நன்றி கூறினார்.