tamilnadu

விவசாயிகளின் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்- ஆட்சியர்

கோவை, அக்.14- கோவையில் இணையவழியில் நடை பெறவுள்ள விவசாயிகளுக்கான குறை தீர்கூட்டம் அக்.23 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சி யர் கு.இராசாமணி வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அக்.16 ஆம் தேதி (வெள்ளி யன்று) துறை அலுவலர்களைக் கொண்டு இணையவழியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், சில நிர்வாக காரணங்க ளால் தள்ளிவைக்கப்பட்டு, வரும் அக்.23 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்ட விவசாயிகள், விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை இணைய வழியாக தெரிவித்து தீர்வு காணும் வகையில் அந்தந்த வட்டார வேளாண்மை  விரிவாக்க மையங்களில் விரிவான ஏற்பாடு கள் செய்யப்படும். எனவே, விவசாயிகள் அந்தந்தப் பகுதியிலுள்ள வேளாண்மை விரி வாக்க மையங்களுக்கு மேற்குறிப்பிட்டுள்ள மாற்று தேதியில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண் டுள்ளார்.