சேலம், செப்.13 - அரசாணை 17பி-யை ரத்து செய்ய வேண்டுமென ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று சேலம், தருமபுரி யில் பேரணி மற்றும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்களை சீரழிக்கும் அர சாணை 145, 100,101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் மீது பழிவாங்கும் நடவ டிக்கையாக போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக பணி நீக்கங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்யவேண்டும். தொடக்க நிலை மற்றும் இடை நிலை ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் வெள்ளியன்று பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்ஒருபகுதியாக, சேலம் கோட்டை மைதானத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஜாக்டோ-ஜியோ அமைப் பினர் பேரணியாக வந்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட் டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகப் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், சந்திரசேகர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல், ஆத்தூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி
தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பேரணி துவங்கி தொலைதொடர்பு அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்களான அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளி நாதன், தமிழாசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இராசா.ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் பி.எம்.கெளரன் ஆகி யோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், மாவட்டப் பொரு ளாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செய லாளர் காமராசு, பட்டுவளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் எம்.சிவப்பிரகாசம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ருத்ரையன், மாநில செயற்குழு உறுப்பினர் என். இராமஜெயம், தமிழ்நாடு நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசி ரியர் கழக மாவட்டச் செயலாளர் ச. கவிதா, மாவட்டத் தலைவர் பி.துரை ராஜ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர் வாகி மைதிலி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம.நெடுஞ்செழியன், பொது நூலகத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.