கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 52 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர்கள் விஜயகுமார், கணேசன், துணை வட்டாட்சியர் உத்திரசாமி, வருவாய் ஆய்வாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.