tamilnadu

img

பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

கோவை, மே 21–பணி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல்இயு நிர்வாகிகளுக்கு கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் செவ்வாயன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்ல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏ.முகமது ஜாபர், என்.பி.ராஜேந்திரன்மற்றும் கே.மாரிமுத்து ஆகியோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்கள். இம்மூவரும் பிஎஸ்என்எல் ஊழியர்களாக மட்டுமின்றி ஊழியர்களின் நலனுக்காகவும், பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தொழிற்சங்க தலைவர்களாவர். இந்நிலையில் ஓய்வு பெறும் இத்தொழிற்சங்க தலைவர்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு எஸ்.மகுடேஷ்வரி தலைமை வகித்தார். எம்.காந்தி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவிதலைவர் எஸ்.செல்லப்பா, மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதைத்தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கநிர்வாகிகள் பணிநிறைவு பெறும் தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

;